பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



எத்தித் தெரிக்கும் நீர்!




எத்தித் தெரிக்கிறாய்
வாழைக்குருத்து போன்ற
உன் பருவக் கால்களால்
பளிங்கு போல தெரிக்கிறது
உன் மீது ஏக்கமாய்
இத்தனை நாள்
தவமிருந்த தண்ணீர்!

ஏன் என்று கேட்கிறது நீர்!
கொலுசுகளின் சப்தம் கேட்டாயா
என்று சொல்கிறாய்
அடிப் பாவாய்!
நீருக்கு கண்கள் உண்டு...
செவியிருக்குமா? உன் சொல் கேட்க...

அட!! பேசிவிட்டதே தண்ணீர்!
கொலுசோசைக்கு
நீரும் அடிமையோ?
கால்களின் வெட்கம்
தெரித்த நீராய் தெரிகிறது..
நில்
ஓடாதே!
சலசலத்துப் போயிருக்கும்
நீருக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்?


நீ அல்லது கால்கள் அல்லது கொலுசு யாவும் பெண்னைக் குறிக்கும்.... நீரானது ஆண்

கொய்தது பிச்சி @ 5:38 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்