பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



மொட்டு




நீர்க் குமிழ் நிலைபோல
நெஞ்சம் நிமிர்ந்து
கண்களை தூண்டுகிறது
முளைக்கப்படாத மொட்டு..

பருவ வயதுகளின்
இடைவெளியில்
நானும் ஓர் அழகியென்று
சூரியனைப் பார்த்து
சுட்டதுவே இந்த மொட்டு!

காலம் கடந்த பின்னும்
விரித்துக் காட்டி
வண்டுகளின் இமைகளை
ஈர்க்கச் செய்யுமே இந்த மொட்டு.

ஏதாவதொரு வண்டின் வாசனையில்
உலர உலர தேன் கொடுத்து
இன்னுமொரு மொட்டு
உருவாக்குமே இந்த மொட்டு..

இறுதிக் காலத்தில்
புயலாவது தென்றலாவது என்று
வண்டின் இறகுகளோடு
பயணம் புரிந்து
தரிசனம் கிடைக்காத
தூரத்திற்குச் சென்றுவிடுமே இந்த மொட்டு...




மொட்டு =  பெண்

கொய்தது பிச்சி @ 5:45 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்